கார் மோதி பாட்டி, பேரன் பரிதாப பலி
செங்கம் : சாலையை கடக்க முயன்ற பாட்டி, பேரன் கார் மோதி பரிதாபமாக பலியாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தானகவுண்டன் புதுாரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சித்ரா, 61. இவரது பேரன் ஜஸ்வந்த், 5. நேற்று காலை 10:00 மணியளவில் சித்ரா, ௧௦௦ நாள் வேலைக்கு புறப்பட்டார். பள்ளி விடுமுறை என்பதால், பேரன் ஜஸ்வந்த்தை உடன் அழைத்துச் சென்றார்.
திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, திருவண்ணாமலையிலிருந்து ஓசூர் நோக்கிச் சென்ற, 'மாருதி ஸ்விப்ட்' கார், சித்ரா, ஜஸ்வந்த் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர்கள், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பாச்சல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்
-
சரக்குகளை விரைந்து கையாளும் திட்டம்; ஓசூர், மதுரையில் செயல்படுத்த ஆய்வு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
'பேட்டியா கண்காட்சி' மே 2ம் தேதி துவக்கம்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு
-
சுய ஒழுக்கம், கட்டுப்பாடு முக்கியம்; தொண்டர்களுக்கு விஜய் கண்டிப்பு
Advertisement
Advertisement