மகள் மாயம் தாய் புகார் 

திட்டக்குடி : மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

திட்டக்குடி, பட்டம்மாள் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். அரசு மருத்துவமனை எதிரே டீ கடை நடத்தி வருகிறார்.

இவரது மகள் சந்தியா,17; பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்தார்.

நேற்று முன்தினம் காலை டீ கடைக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் கடைக்கு செல்லவில்லை.

வீட்டிற்கு மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தாய் பரணி அளித்த புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து சந்தியாவை தேடி வருகின்றனர்.

Advertisement