விளையாட்டு போட்டி பரிசளிப்பு

பாகூர்: சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆண்டு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
பாகூர் அடுத்துள்ள சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளியில், 2024-25ம் ஆண்டிற்கான ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். ஆசிரியர்கள் வெரோனஸ் விஜயலட்சுமி, செல்வகுமரன், கணேசன், சித்திரைச்செல்வி, சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஆசிரியர்கள் செந்தில்முருகன், பெருமாள், செந்தில்குமார், சுந்தரி, புஷ்பலிங்கம் ஆகியோர் பாராட்டி பேசினார். உடற்கல்வி ஆசிரியர் தணிகைகுமரன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
Advertisement
Advertisement