சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கடலுார் : கடலுார் முதுநகர் சாராய வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார், முதுநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முதுநகர் புஷ்பராஜ், 45; என்பவர் மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்து கைது செய்தனர்.
அவர் மீது, ஏற்கனவே முதுநகர் போலீசில் 2 சாராய வழக்குகள், மதுவிலக்கு பிரிவில் ஒரு சாராய வழக்கு என மொத்தம் 3 வழக்குகள் உள்ளன. இவரின் தொடர் குற்றசெயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார், பரிந்துரையின்பேரில் கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, புஷ்பராஜ் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement