சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!

மும்பை: ''சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது'' என 'வேவ்ஸ்' மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
மும்பையில் 'வேவ்ஸ்' உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் நடிகர்கள் மோகன்லால், ரஜினி, ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவை பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றி பெற்றுள்ளது. சினிமாவும், இசையும் உலகை இணைக்கிறது. திரைப்பட தயாரிப்பு, கேமிங், இசை உள்ளிட்டவற்றில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது.
வேவ்ஸ் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும்.
இந்தியா அனிமேஷன் மற்றும் கிராபிக் துறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளாவிய சந்தையில் அனிமேஷன் துறையின் மதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று மும்பையில் 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
இந்தியாவின் உணவு உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவின் இசையும் உலகம் முழுவதும் பிரபலமடையும் என்பது எனக்கு தெரியும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும். உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அஞ்சல் தலைகள் வெளியீடு!
மும்பையில் நடந்த மாநாட்டில், இந்திய சினிமாவின் 5 பிரபலங்களின் நினைவு அஞ்சல் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார். குரு தத், பி.பானுமதி, ராஜ் கோஸ்லா, ரித்விக் கட்டக், சலீல் சவுத்ரி ஆகிய 5 பேரின் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டது.



மேலும்
-
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு கந்தர்பால் சம்பவத்தில் தொடர்பு; பகீர் தகவல்
-
தெற்கு காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள்!
-
உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் கருத்துக்கு அன்புமணி சரமாரி கேள்வி
-
நேற்று கோல்கட்டா: இன்று ராஜஸ்தான்; ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் பலியான சோகம்!
-
நலத்திட்ட உதவி வழங்கினார் வாசன்
-
' வாகனத்தை பின் தொடராதீர்கள்': ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை