மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

குறிஞ்சிப்பாடி: மதுபாட்டில்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்

குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர்கள் டைமன் துரை, ஜெயதேவி ஆகியோர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆடூர் அகரத்தில் வீடு ஒன்றின் பின்புறம் மதுபாட்டில் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன்,28; விழுப்புரம் அடுத்த கீழ்பாதியைச் சேர்ந்த ராஜி, 32; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல, கஞ்சமநாதன்பேட்டையில் மதுபாட்டில் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன்,57; என்பவரையும் போலீசார் கைது செய்து, 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement