துவரம் பருப்பு கொள்முதல் மே இறுதி வரை நீட்டிப்பு

பெங்களூரு: ''துவரம் பருப்பு ஆதரவு விலையின் கொள்முதல் காலம், இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது,'' என வேளாண் சந்தை துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு, ஒரு டன் துவரம் பருப்புக்கு 7,550 ரூபாய் விலை நிர்ணயித்தது. இதை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள், முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை ஏற்ற முதல்வர் சித்தராமையா, 450 ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்தார். இதன் மூலம் ஒரு டன் துவரம் பருப்பு, 8,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மே 1ம் தேதி (நேற்று) முதல் துவரம் பருப்பு கொள்முதல் காலம் முடிவடைந்து உள்ளது.
மத்திய அரசு குறிப்பிட்ட 3.06 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படவில்லை. இதுவரை 1.83 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கொள்முதல் காலத்தை நீட்டிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்ற மத்திய அரசும், இம்மாதம் இறுதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. எனவே இம்மாதம் இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு