பரமக்குடியில் நந்தி, கிளி வாகனத்தில் சுவாமி உலா

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் சுவாமி, அம்பாள் நந்தி மற்றும் கிளி வாகனத்தில் வலம் வந்தனர்.

பரமக்குடியில் சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்), விசாலாட்சி அம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கி நடக்கிறது.நேற்று மாலை நந்திகேஸ்வரர் வாகனத்தில் பிரியா விடையுடன் சந்திரசேகர சுவாமி வீற்றிருந்தார்.

கிளி வாகனத்தில் விசாலாட்சி அம்பாள் அருள் பாலித்தார். தொடர்ந்து இரவு மேள, தாளங்கள் முழங்க வீதி உலா வந்தனர்.

Advertisement