கடலாடி தாலுகாவிற்கும் உள்ளூர் விடுமுறை தேவை பக்தர்கள் கோரிக்கை
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் வருண பகவானால் பூஜிக்கப்பட்ட பழமையும் புரதான சிறப்பும் பெற்ற சிவன் கோயில் உள்ளது.
இங்கு சித்ரா பவுர்ணமி அன்று திருக்கல்யாண உற்ஸவம், மாரியூர் மன்னார் வளைகுடா கடலுக்குள் சிவபெருமான் வேடம் அணிந்து நாட்டுப் படகில் சென்று வலை வீசும் திருவிளையாடல் காட்சியும் நிகழ்த்திக் காண்பிக்கப்படுகிறது.
இவ்விழாவில் பங்கேற்க கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்கின்றனர்.
பக்தர்கள் கூறியதாவது: மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் வலை வீசும் படலம், திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. மே 12ல் கடலாடி தாலுகாவை சுற்றியுள்ள பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில் உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.
பரமக்குடியில் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் உள்ளூர் விடுமுறை அளித்ததை போன்று கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட மாரியூர் வலை வீசும் படலம் நிகழ்விற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பதற்கு பயனுள்ளதாக அமையும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை