பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடக்கிறது. நேற்று காலை 8:45 மணிக்கு சிவாச்சாரியார்கள் மணிகண்டன் குருக்கள், வல்மீகநாத குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.
கொடிமரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் ஆகியவற்றை கொண்டு அபிேஷகம் நடந்தது. தேவஸ்தான செயல் அலுவலர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் திருவெற்றியூர் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
மே 5ல் திருக்கல்யாணம், 9 ல் தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரி நடைபெறும். விழா நாட்களில் பூதம், அன்னம், வெள்ளி ரிஷபம், நந்தி, சிம்மம் போன்ற வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
Advertisement
Advertisement