குழாய் உடைப்பால் ரோட்டில் ஓடும் குடிநீர்

திருவாடானை: திருவாடானை-திருவெற்றியூர் ரோட்டில் ஆதியூர் அருகே குழாய் உடைந்து ரோட்டில் தண்ணீர் ஓடுவதால் கிராமங்களில் குடிநீர் சப்ளையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
ஆதியூர் மக்கள் கூறியதாவது: திருவாடானையில் இருந்து ஆதியூர், அரும்பூர் வழியாக திருவெற்றியூர் மற்றும் கிராமங்களுக்கு காவிரி நீர் செல்கிறது. தரமில்லாத குழாய்கள் பதிக்காததால் அடிக்கடி குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. ஆதியூர் அருகே இரு நாட்களாக குழாய் உடைந்து ரோட்டில் தண்ணீர் ஓடுகிறது.
இதனால் திருவெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்பை சரி செய்ய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
Advertisement
Advertisement