மினி பார் ஆன பெரிய கண்மாய் தென்கலுங்கு கரைப்பகுதி போலீஸ் நடவடிக்கை அவசியம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே லாந்தையில் உள்ள பெரிய கண்மாய் தென் கலுங்கு ஷட்டர், கரையில் அமர்ந்து சமூக விரோதிகள் கஞ்சா, மது அருந்துவதற்கு பயன்படுத்துகின்றனர். போலீசார் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் அருகே லாந்தையில் மதுரை ரோட்டோரத்தில் பெரிய கண்மாய் தென்கலுங்கு வாய்க்கால், மதகு ஷட்டர் உடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் உள்ளதால் ஷட்டரில் இருந்து வாய்க்காலில் வெளியேறும் தண்ணீரில் பெண்கள் குளிக்க, துவைக்க பயன்படுத்துகின்றனர்.
ஷட்டர் பகுதியில் சில சமூக விரோதிகள் கஞ்சா, மது அருந்தும் இடமாக மாற்றியுள்ளனர். தென்கலுங்கு ஷட்டர் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாக பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர். மது பாட்டில்களை உடைந்து சிதறி கிடக்கின்றன. எனவே பெரிய கண்மாய் ஷட்டர் பகுதி, கரையில் அமர்ந்து கஞ்சா, மது அருந்துபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட வேண்டும்.
மேலும்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி