செயல் அலுவலர் இல்லாத பேரூராட்சி
இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சான்றிதழ் மற்றும் பிளான் அப்ரூவல் தாமதமாகிறது.
மேலும் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை ஆங்காங்கே தீயிட்டு கொளுத்துவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் திட்ட பணிகளால் சேதமடைந்த ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் துல்கருணை சேட், நகர தலைவர் ஜலாலுதீன், செயலாளர் அகமது ஜலால், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சையது இப்ராகிம் ஆகியோர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
மேலும் இந்த பேரூராட்சிக்கு கூடுதல் பொறுப்பாக இல்லாமல் நிரந்தரமாக செயல் அலுவலர் நியமிக்க கோரியுள்ளனர்.
மேலும்
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு