தனியார் பங்களிப்புடன் கண்மாய்கள் மேம்பாடு
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் காரையூரில் தொழிலாளர் தினத்தை யொட்டி கிராம சபா கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தற்போது இப்பகுதியில் பாயும் பாலாறு,சருகனி மற்றும் விருசுழியாறுகளை துார்வாரும் பணி தனியார் பங்களிப்புடன் நடந்து வருகிறது. இதன் மூலம் வரும் கூடுதல் வெள்ள நீரை சேமிக்க கண்மாய் பராமரிப்பிற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நமது மாவட்டம் ஏரிகள்,குளங்கள் அதிகமாக உள்ள பகுதி. அரசின் உள்ளாட்சித்துறை மூலம் 442 கண்மாய்கள் பராமரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இங்கு கூடுதலாக தனியார் பங்களிப்புடன் 20 கண்மாய்கள் மேம்படுத்தப்படும். கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
Advertisement
Advertisement