'ஓசி சரக்கு' கேட்டதால் வி.சி., நிர்வாகி கொலை; 2 பேர் கைது
வேலுார்:வேலுார் அடுத்த அரியூர் ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சரத்குமார், 34; வி.சி., தொழிலாளர் முன்னணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். ஏப்., 28ம் தேதி இரவு சரத்குமார் தலை, முகம், கால்கள் மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். பாகாயம் போலீசார் விசாரித்தனர்.
சரத்குமாரை கொலை செய்தது, அரியூரைச் சேர்ந்த டேவிட்ராஜ், 30, ஆவாரம்பாளையத்தை சேர்ந்த சிவா, 50, என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'அரியூர் டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்கச் சென்ற சரத்குமார், டேவிட்ராஜிடம் பணம் கேட்டுள்ளார். ஓசியில் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
'டேவிட்ராஜ் மறுத்ததால், அவரை சரத்குமார் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த டேவிட்ராஜ் தன் நண்பர் சிவாவுடன் சேர்ந்து சரத்குமாரை கற்கள் மற்றும் கம்பால் தாக்கி கொலை செய்துள்ளார். அவர்களை கைது செய்துள்ளோம்' என்றனர்.
மேலும்
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் மே 4ல் தொடக்கம்: 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!
-
போப் தோற்றத்துடன் அதிபர் டிரம்ப் படம் வெளியீடு; சமூக வலைதளத்தில் வைரல்!