என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் நடந்த அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம், ''என்னை கொலை செய்ய சதி முயற்சி நடக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் என்னைக் காப்பாற்றினார்'' என குறிப்பிட்டார்.


பொல்லாப்பயலுக. அப்பா, இந்த தொலைக்காட்சி, ஒன்று என்றால் ரெண்டு என்கின்றனர். நேற்று கூட ஒரு சம்பவம் நடந்து விட்டது. என்னை கொலை செய்ய சதி செய்து விட்டனர். தருமை ஆதினம் ஆசி தான் என்னை காப்பற்றியது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருமான் தான் என்னை காப்பாற்றினார். இன்று இந்த இடத்திலே நிப்பேனா என்ற அளவுக்கு நேற்று ஆகி விட்டது. அவ்வளவு துாரம் நடந்து விட்டது. நல்ல காரியத்தை பேச முடியவில்லை ஐயா. இவ்வாறு மதுரை ஆதினம் பேசினார்.
மனிதாபிமானம்; நட்டா பேச்சு!
மாநாட்டில் நட்டா பேசியதாவது: வாழ்க தமிழ், வளர்க தமிழகம். ஆன்மிகம் மட்டுமின்றி சமூக சேவையிலும் தருமபுரம் ஆதினம் ஈடுபட்டு வருவது பாராட்டத்தக்கது. மனிதாபிமானத்தை சைவ சித்தாந்தம் வலியுறுத்துகிறது.
தேவாரம், திருவாசகம் தற்போதும் உணர்வுப்பூர்வமாக பாடப்படுகிறது. பாரம்பரிய சைவ சித்தாந்தம் பின்பற்றும் சைவ ஆதினம் பற்றி நான் அறிவேன். சைவ சித்தாந்தத்திற்கு தமிழகம் சிறந்த மண். இவ்வாறு அவர் பேசினார்.
கவர்னர் ரவி பேச்சு
''சைவ சித்தாந்தம் தமிழுக்கு அடையாளம். சைவ சித்தாந்தத்தில் சமுதாய வேறுபாடு கிடையாது. சனாதன தர்மமே ஆன்மிகத்தின் அடையாளம். அனைவரும் ஒன்று என சனாதனம் கூறுகிறது.
பக்தி நிலையிலேயே சிவனை அடைய முடியும். பக்தி தான் ஆன்மிகத்தை காப்பாற்றுகிறது'' என மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில் தெரிவித்தார்.













மேலும்
-
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய கோவில் சாலைகளால் அவதி
-
அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா
-
தொழுநோய் பாதிப்புக்குரிய 100 பேருக்கு நலத்திட்ட உதவி
-
திரவுபதியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
-
மரம் சாய்ந்து மின்கம்பங்கள் சேதம் 2 நாள் மின் வினியோகம் பாதிப்பு
-
போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி பெரியார் பல்கலை அழைப்பு