பெண் அமைச்சருக்கு அலைபேசியில் தொல்லை: கல்லூரி மாணவர் கைது

புனே: மஹாராஷ்டிராவில் பெண் அமைச்சருக்கு அலைபேசியில் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் பொறியியல் கல்லூரி மாணவரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிரா மாநில பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே(45), இவரது அலை பேசி வாயிலாக கடந்த சில நாட்களுக்காக மர்ம நபர் அடிக்கடி அழைத்து தொல்லை கொடுத்துள்ளார். குறுஞ்செய்தியும் அனுப்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சைபர் குற்றப்பிரிவில் பெண் அமைச்சர் தரப்பு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரின் அலைபேசி எண் , இருப்பிடம் குறித்து விசாரித்ததில் அந்த நபர் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த அமோல் சங்கான்ராவ் காலே என்ற 25 வயது பொறியியல் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.
அந்த மாணவரை புனே அருகே பதுங்கியிருந்த போது கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.















மேலும்
-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பேச்சு
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி