காரில் இறந்து கிடந்த நபர்: போலீசார் விசாரணை
வானுார் : தனியார் நிறுவன ஊழியர் காரில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், கூடுவாஞ்சேரி பிருந்தாவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 51; இவர், திண்டிவனம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் காரில் புதுச்சேரி சென்றவர் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று புதுச்சேரி - திண்டிவனம் சாலையில், தென்னகரம் சந்திப்பு சாலையோரம் காரின் சீட்டில் வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார்.
கிளியனுார் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெஞ்சு வலியால் இறந்தாரா, மூச்சி திணறலால் இறந்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழிதீர்க்குமா சென்னை? பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு தேர்வு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே
-
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!
-
கீவ் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது: ரஷ்யா எச்சரிக்கை
-
திருமண செலவை குறைத்து சாலை அமைத்து கொடுத்த தம்பதி; கிராம மக்கள் பாராட்டு
-
சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?
Advertisement
Advertisement