சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?

கொழும்பு: சென்னையில் இருந்து சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சென்றதாக வெளியான தகவலை தொடர்ந்து, கொழும்பு விமான நிலையத்தில் அந்நாட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பில் நுழைய தடை, பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து, பாக்., பொருட்களை இறக்குமதி செய்ய தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அடையாளம் கண்டனர். அவர்களின் போட்டோக்களை வெளியிட்டு, தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள், சென்னையில் இருந்து நண்பகல் 11.59க்கு இலங்கை சென்ற விமானத்தில் தப்பிச் சென்றதாக சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு இமெயில் வந்தது. இதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.
சென்னையில் இருந்து விமானம் இலங்கைக்கு புறப்பட்டு சென்று விட்டதால், உடனடியாக கொழும்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு, இது பற்றி தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பந்தப்பட்ட விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் கொழும்பு விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். ஆனால், சந்தேகிக்கும்படியான நபர்கள் யாரும் இல்லை என்று உறுதியானது. அதன்பிறகு, அந்த இமெயில், புரளி என அதிகாரிகள் உறுதி செய்தனர்.
வாசகர் கருத்து (24)
fitz gerard rayen - ,இந்தியா
04 மே,2025 - 08:43 Report Abuse

0
0
Reply
Raja k - ,இந்தியா
03 மே,2025 - 21:17 Report Abuse

0
0
Suresh Rajagopal - அஹமதாபாத்,இந்தியா
03 மே,2025 - 21:26Report Abuse

0
0
Tetra - New jersy,இந்தியா
03 மே,2025 - 21:30Report Abuse

0
0
Reply
S.Martin Manoj - ,இந்தியா
03 மே,2025 - 20:56 Report Abuse

0
0
Tetra - New jersy,இந்தியா
03 மே,2025 - 21:32Report Abuse

0
0
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
03 மே,2025 - 22:00Report Abuse

0
0
Reply
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன் - ,இந்தியா
03 மே,2025 - 20:55 Report Abuse

0
0
Reply
India our pride - Connecticut,இந்தியா
03 மே,2025 - 20:48 Report Abuse

0
0
Reply
பாமரன் - ,
03 மே,2025 - 20:39 Report Abuse

0
0
Reply
Gopalan - ,
03 மே,2025 - 20:18 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
03 மே,2025 - 20:03 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03 மே,2025 - 19:56 Report Abuse

0
0
பாமரன் - ,
03 மே,2025 - 20:40Report Abuse

0
0
M R Radha - Bangalorw,இந்தியா
03 மே,2025 - 21:31Report Abuse

0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
03 மே,2025 - 19:53 Report Abuse

0
0
Reply
மேலும் 8 கருத்துக்கள்...
மேலும்
-
உளவு தகவல் சேகரிப்புக்கு அதிநவீன கருவி; பறக்க விட்டு சோதனை செய்தது இந்தியா!
-
திருவாரூரில் அரசு பஸ்- வேன் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பரிதாப பலி
-
தி.மு.க., மா.செ.,க்கள் செல்வாக்கு; கடிவாளம் போட்ட முதல்வர்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
பழிவாங்க வழக்கு தொடுத்த ரவுடி; ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது நீதிமன்றம்!
-
'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகளை தி.மு.க., இழக்கும்'
Advertisement
Advertisement