5 பைக்குகள் திருட்டு வாலிபர் கைது

சங்கராபுரம்: பல்சர் பைக்குகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று குளத்துார் கூட்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியே பல்சர் பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் விரியூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜான்கென்னடி,28; என்பதும், அவர் ஓட்டி வந்த பைக் திருடியது என்பதும், மேலும், ஏற்கனவே சங்கராபுரம் சுற்று வட்டார பகுதியில் 4 பைக்ககள் திருடி வைத்திருப்பது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ஜான்கென்னடியை கைது செய்தனர்.
மேலும், அவர் திருடி வைத்திருந்த 5 பல்சர் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழிதீர்க்குமா சென்னை? பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு தேர்வு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே
-
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!
-
கீவ் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது: ரஷ்யா எச்சரிக்கை
-
திருமண செலவை குறைத்து சாலை அமைத்து கொடுத்த தம்பதி; கிராம மக்கள் பாராட்டு
-
சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?
Advertisement
Advertisement