ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள் உயிரிழப்பு
புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்ற இரண்டு காளைகள் இறந்தன.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட மேலாத்துார் பகுதியை சேர்ந்த தேவாராஜேந்திரன் என்பவருடைய காளை பள்ளத்திவிடுதி பகுதியில் உள்ள 20 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இதேபோல், வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட திருச்சி ஏர்போர்ட் சிவா என்பவருக்கு சொந்தமான காளை ஒன்று அருகே உள்ள கருவேல மரத்தில் சிக்கிக்கொண்டதில் காளையின் கழுத்தில் இருந்த கயிறு காளையின் கழுத்தை இறுக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
இரண்டு காளைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்; ராணுவத்திற்கு பாராட்டு
-
பாக்.,கில் தாக்குதல் நடத்தியது எப்படி: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம்
-
எல்லையில் பதட்டம்: துணை ராணுவத்தினருக்கு விடுமுறை ரத்து
-
நாளை கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
-
‛‛ஆபரேஷன் சிந்துார்''-ல் பங்கேற்ற அச்சம் அறியா இந்திய சிங்கப் பெண்கள்!!
-
10.... 11.... 15... பாகிஸ்தானுக்கு 'சிந்தூர்' பாடம் புகட்டிய இந்தியா!
Advertisement
Advertisement