வாலிபர் இறப்பில் மர்மம்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் ஜாக்கிசான் 23.

நேற்று முன்தினம் இரவு உசிலம்பட்டி பால்பாண்டி 25, மற்றும் சில நண்பர்களுடன் தனது வீட்டின் 3வது மாடிப்பகுதியில் கூடியிருந்தனர். இரவு உணவுக்குப்பின் ஜாக்கிசான் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் இறந்தார். சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் விக்ரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Advertisement