பரமக்குடியில் பணியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு

பரமக்குடி : பரமக்குடி, எமனேஸ்வரம் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

இதன்படி 2025--27ம் ஆண்டுக்கான புதிய தலைவர் ஜோதி கிருஷ்ணன், துணைத் தலைவர் ஆத்மா ராவ், செயலாளர் கண்ணன், உதவி செயலாளர் கோபி, பொருளாளர் அனந்த கிருஷ்ணன் தேர்வாகினர்.

மேலும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக கோபிநாத், மனோகரன், பாலன், கணேஷ் பாபு, கிருஷ்ணன், ராமலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டுறவு பணியாளர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் கைத்தறி நெசவுக்கான சலுகைகள் மற்றும் தேவைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உறுதி எடுக்கப்பட்டது.

Advertisement