சூறைக்காற்றில் விழுந்தது மின் விளக்கு கம்பம்; தப்பினார் திமுக எம்.பி., ராஜா

மயிலாடுதுறையில் நகர திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சின்ன கடை வீதியில் நேற்று இரவு நடைபெற்று கொண்டிருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் எம்.பி. ஆ. ராஜா பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று பலத்த காற்று வீசியதால் மேடையின் அருகே பொருத்தப்பட்டிருந்த போக்கஸ் மின்விளக்குகள் கம்பம் சாய்ந்து ஆ ராஜா பேசிக் கொண்டிருந்த மைக் மீது விழுந்தது. அப்போது ராஜா சுதாரித்து அங்கிருந்து நகர்ந்து கொண்டதால் எவ்வித காயமும் இன்றி தப்பினார்.
அதையடுத்து உடனடியாக பேச்சை நிறுத்திய அவர் அங்கே இருந்து புறப்பட்டு சென்றார். மழையால் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. கூட்டம் நடந்தது இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியதால் மேடை அருகே கட்டப்பட்டிருந்த பேனர்கள் கீழிந்ததை அடுத்து கட்சியினர் பேனர்களை அகற்றினர்.

Advertisement