துணை நடிகை காலமானார்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாயி 73. இவர் இயக்குனர் பாரதிராஜாவின் 'தெற்கத்திப் பொண்ணு' சீரியல் மூலம் பிரபலமானவர்.

காதுகளில் தண்டட்டியுடன் கிராம பாங்கான தோற்றத்தில், துணை நடிகையாக 'மனம் கொத்தி பறவை', 'வில்லு' உட்பட 30 க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தவர் திடீர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement