தியேட்டர் கூரை இடிந்து விழுந்து விபத்து

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் ஈ.வி.பி., சினிமாஸ் என்ற தியேட்டர் உள்ளது. இங்குள்ள ஐந்து திரைகளில் அண்மையில் வெளியான படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், திரளான ரசிகர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை 3:00 மணி அளவில், சென்னை மற்றும் புறநகரில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த நிலையில், திடீரென தியேட்டரின் நுழைவாயில் முகப்பு மற்றும் கூரை சேதமாகி திடீரென இடிந்து விழுந்தது. திரைப்படம் பார்க்க காத்திருந்த ரசிகர்கள், அதிர்ச்சியடைந்து அலறியடித்து வெளியேறினர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கிரேன் உதவியுடன் சேதமான பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகினறன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
Advertisement
Advertisement