வைர வியாபாரியிடம் ரூ. 20 கோடி நகை பறிப்பு
வடபழனி: அண்ணா நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர்; பிரபல வைர நகை வியாபாரி. இவருக்கு அறிமுகமான அருள்ராஜ் என்பவர், வைர நகைளை விற்று தருவதாக கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் சந்திரசேகர் வீட்டிற்கு ராகுல் என்பவரை அழைத்து வந்த அருள்ராஜ், வைர நகைகளை பார்த்து விட்டு, அதற்கான விலையை பேரம் பேசி சென்றுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மாலை வைர நகைகளை, வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு கொண்டு வரும்படியும், அங்கு வந்து வாங்கி கொள்வதாகவும் அருள்ராஜ் கூறியுள்ளார். அதன்படி, சந்திரசேகர் தன்னிடம் உள்ள 20 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகளுடன், நேற்று மாலை அந்த ேஹாட்டலுக்கு சென்றார்.
அருள்ராஜ் தங்கி இருந்த அறையில், அவருடன் ராகுல், அசோக் என்பவர்களும் இருந்தனர். நகைகளை வாங்குவது போல், பாவனை காட்டியவர்கள், சிறிது நேரத்தில் சந்திரசேகரை தாக்கி, கட்டிப்போட்டு நகைளுடன் தப்பி சென்றனர்.
சிறிது நேரம் கழித்து அறைக்குள் சென்ற ஹோட்டல் ஊழியர்கள், கட்டப்பட்ட நிலையில் இருந்த சந்திரசேகரை மீட்டனர்.
இது குறித்து, வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை