ஆட்டுக்கறி குழம்பில் தேரை ஹோட்டலுக்கு ௶'சீல்' வைப்பு

பூந்தமல்லி: பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே, 'நாவலடி கொங்குநாடு' உணவகம் இயங்குகிறது. இங்கு, நேற்று முன்தினம் இருவர் மதிய உணவு சாப்பிட சென்றனர்.
அசை உணவை, ஆர்டர் செய்து சாப்பிட்டபோது, சாதத்திற்கு சுடசுட மட்டன் குழம்பு பரிமாறப்பட்டது. குழம்பில் மட்டன் கறியுடன், தவளை வகையைச் சேர்ந்த தேரை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதை வீடியோவாக பதிவு செய்ததுடன், ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்து, அங்கிருந்து புறப்பட்டனர்.
சாப்பிட வந்தோரால் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. அவர்களின் உத்தரவையடுத்து, பூந்தமல்லி உணவு பாதுகாப்பு அலுவலர் வேலவன், நேற்று அந்த உணவகத்திற்கு சென்று விசாரித்தார்.
உணவக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கி, உணவு விற்பனைக்கு தடை விதித்ததுடன், உணவகத்தை பூட்டி 'சீல்' வைத்தார்.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை