மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி

மணலி: மணலி, பெரியதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காசி, 70. இவர், நான்கு பசுமாடுகளை வைத்து, பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று மாலை, மணலி - ஆமுல்லைவாயல் பகுதியில், மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.
மாலையில் வீடு திரும்பிய போது, திடீரென மழை பெய்தது. அப்போது, மணலி - லால்பகதுார் சாஸ்திரி தெருவில் வந்து கொண்டிருந்த அவரது பசுமாடு ஒன்று, தெருவிளக்கு கம்பத்துடன் இணைக்கப்பட்டிருந்த மின் ஒயரை மிதித்துள்ளது.
இதில், மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து, தகவலறிந்த மின் வாரிய அதிகாரிகள், மின் ஒயர் இணைப்பை சரிசெய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
Advertisement
Advertisement