குப்பையால் நாசமான குடிநீர் வாரிய இடம்

அயனாவரம்: அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட வில்லிவாக்கம், நியு ஆவடி சாலை உள்ளது. அயனாவரம் அருகில் காலியாக உள்ள வாரிய இடத்தில், பூமிக்கு அடியில் குடிநீர் வாரியத்தின் ராட்சத குழாய் 3 கி.மீ., துாரம் செல்கிறது.
இச்சாலையில், வாரியத்திற்கு சொந்த இடமான, வில்லிவாக்கம், ஐ.சி.எப்., உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, மீதமுள்ள இடங்கள் அப்படியே விடப்பட்டன.
மேலும், காலி இடமாக இருப்பதால் அங்கு குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
அயனாவரம் பகுதியில் உள்ள சக்கரவர்த்தி நகர், தந்தை பெரியார் நகர் மற்றும் காமராஜர் தெருக்களுக்கு செல்ல, நியூ ஆவடி சாலையை கடந்து, இணைப்பு பாலம் வழியாக செல்ல வேண்டும்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் இடத்தில், குப்பை கழிவு தேங்கி இருப்பதால், பல ஆண்டுகளாக சுகாதார சீர்கேடு நீடிக்கிறது. நோய் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
வாரியத்திற்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தும், அத்துமீறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை