பொன்னியம்மன் கோவிலில் நாளை தேர் திருவிழா

மயிலம், : கொரளூர் பொன்னியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நாளை 6ம் தேதி நடக்கிறது.
மயிலம் அடுத்த கொரளூர் பொன்னியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நாளை 6ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிடும் நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம், 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. 7ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
-
ரயிலில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
Advertisement
Advertisement