மயான பிரச்னைக்கு தீர்வு

ஒட்டன்சத்திரம் : மூலச்சத்திரம் அண்ணா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு இறப்பவர்களை ஓடை அருகே உள்ள மயானத்தில் 30 ஆண்டுகளாக அடக்கம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் இறந்தார். மயானம் பட்டா நிலத்தில் உள்ளது எனக் கூறி நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ஜெயப்பிரகாஷ், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடலை அடக்கம் செய்தனர்.

Advertisement