போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி

புதுச்சேரி : பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் பொது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி டி.ஜி.பி., உத்தரவின் பேரில், சனிக்கிழமைகளில் நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவர்த்தி செய்தனர்.
மேட்டப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், காரைக்காலில் சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, மடுகரை மேற்கு எஸ்.பி., வம்சீத ரெட்டி, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., பிரவீன் குமார் திரிபாதி, எஸ்.பி.,க்கள் செல்வம், மோகன்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இதில், பொது மக்களிடம் இருந்து 73 புகார்கள் பெறப்பட்டு, அதில் 26 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை