கடலில் விழுந்த மீனவர் பலி

காரைக்கால் : காரைக்காலில் கடலில் தவறி விழுந்த மீனவர் உயிரிழந்தார்.

காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந் தவர் முருகானந்தம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் நேற்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த சைந்தவன், 19 ; உள்ளிட்ட ஐந்து பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பின் இவர்கள் கரை திரும்பும்போது, கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் படகு அங்கும் இங்கும் அலைமோதியது. இதில் சைந்தவன் தடுமாறி கடலில் விழுந்து மாயமானார். சைந்தவனை மீனவர்கள் தேடியும் கிடைக்கவில்லை.

பின் அருகே உள்ள கடற்கரை பகுதியில் சைந்தவன் உடல் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த நகர போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement