உழவர் சந்தையில் விவசாயிகள் வியாபாரிகள் வாக்குவாதம்
பழநி பழநி உழவர் சந்தையில் தக்காளி விற்பனை செய்ய வந்த வியாபாரிகளால் வாக்குவாதம் ஏற்பட்டது.
பழநி, உழவர் சந்தையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகள் அதிக அளவில் காய்கறிகளை ஆக்கிரமித்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று காலை வெளிமாநில தக்காளிகளை உழவர் சந்தைக்கு விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வந்தனர். இதனால் உழவர் சந்தை விவசாயிகள் வேளாண் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தக்காளி கொண்டு வந்த வாகனங்கள் வெளியேற்றப்பட்டது. அதிகாரிகள் வியாபாரிகளுக்கு துணை போகாமல், உழவர் சந்தைக்கு உற்புறம் மற்றும் வெளியே உள்ள வியாபாரிகளின் ஆதிக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
Advertisement
Advertisement