ஏரியில் மூழ்கி இறந்த சிறுவன், சிறுமி; நிவாரண நிதி தலா ரூ.3 லட்சம் வழங்கல்

திருக்கோவிலுார்: கூவாகம் ஏரியில் விழுந்து இறந்த சிறுவன், சிறுமியின் குடும்பத்திற்கு அரசின் நிவாரண நிதியாக தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
திருக்கோவிலுார் அடுத்த வடக்குநெமிலி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் ஜெயலட்சுமி, 10; டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி மகன் நித்தேஷ், 5; நேற்று முன்தினம் உளுந்துார்பேட்டை, கூவாகம் ஏரி நீரில் தவறி விழுந்து இறந்தனர்.
இவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, இரு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, நேற்று தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடி, வடக்குநெமிலி கிராமத்திற்கு நேரில் சென்று சிறுமி ஜெயலட்சுமியின் பெற்றோரிடம் 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, டி.எடையார் கிராமத்திற்குச் சென்று அங்கு, இறந்த சிறுவன் நித்தேஷ் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
கலெக்டர்கள் கள்ளக்குறிச்சி பிரசாத், விழுப்புரம் ேஷக் அப்துல் ரஹ்மான், திருக்கோவிலுார் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், தாசில்தார் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை