மோட்ச தீபம்

திண்டிவனம் : பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, இந்து மக்கள் கட்சி சார்பில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திண்டிவனத்தில் நடந்தது.

காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர்.

இந்து மக்கள் கட்சியின் ஆன்மிகப்பேரவை சார்பில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

திண்டிவனம் காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, ஆன்மிகப்பேரவை மாநில தலைவர் சக்திவேல், மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் ஜெகதீஸ்வரன், செந்தில் பங்கேற்றனர்.

Advertisement