கிண்டி மருத்துவமனையில் நர்ஸை தாக்கிய வார்டுபாய் கைது

கிண்டி, கிண்டி அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு, லட்சுமி, 55, என்ற செவிலியர் பணியில் இருந்தார்.
கிண்டி, செட்டி தோட்டத்தை சேர்ந்த வார்டுபாய் ஜான்சன், 27, என்பவர், பணி முடித்துவிட்டு, போதையில் மருத்துவமனையில் துாங்கிக்கொண்டிருந்தார்.
அவரை எழுப்பிய லட்சுமி, அங்கிருந்து வெளியேற வலியுறுத்தி, மேல் அதிகாரியிடம் புகார் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இதை கேட்ட ஜான்சன், லட்சுமியை தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரின் செயலை மொபைல் போனில் படம் பிடிக்க முயன்ற போது, கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சக ஊழியர்கள் அவரை பிடித்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஜான்சன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கிண்டி போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரோடு, வாறுகால், பஸ் வசதியின்றி சிரமம்
-
அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆண்கள் தங்குமிடத்தில் வசதிகள்
-
காரியாபட்டியில் முடிந்தது ஆக்கிரமிப்பு அகற்றும் கெடு: நடவடிக்கை பாயுமா
-
விளைநிலங்களில் வன விலங்குகளால் சேதத்தை தவிர்க்க விவசாயிகள் எதிர்பார்ப்பு:
-
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்; யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
-
சாத்துார் அமீர் பாளையம் ரோட்டோரம் எரிக்கப்படும் குப்பையால் மக்கள் அவதி
Advertisement
Advertisement