சேதமான நிழற்குடை: அச்சத்தில் பயணியர்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் பஜார் பகுதியில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. இப்பகுதிவாசிகள் திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு, சென்னை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடை, ஆங்காங்கே விரிசல் விட்டு, கூரையின் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து வருவதால், நிழற்குடையை பயன்படுத்த பயணியர் அச்சப்படுகின்றனர். மேலும் வெயில், மழைக்கு ஒதுங்க கூட பயன்படாத நிழற்குடையாக மாறி வருகிறது.

எனவே, சேதமடைந்த நிழற்குடையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement