பூஜாரிகள் வாரியத்தில் சேர முகாம்
குஜிலியம்பாறை, மே 7- --
தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் கிராமப்புறங்களில் உள்ள அரசு கோயில்கள் அல்லாத மற்ற கோயில்களான காளியம்மன் மாரியம்மன், பகவதி அம்மன், பட்டாளம்மன், முத்தாலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் பூஜாரிகளை ஒருங்கிணைத்து கோயில் பூஜாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்யும் நோக்கில் குஜிலியம்பாறை கோவிலுாரில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
மே 6 முதல் மே 8 முடிய மூன்று நாட்கள் நடக்கும் இதில் விண்ணப் பங்களை பெற்று பூர்த்தி செய்து அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., களிடம் போதிய சான்று பெற்று வழங்க வேண்டும்.
ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் திவ்யலட்சுமியிடம் கேட்டபோது, கிராம கோயில் பூஜாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம் என்றார். அறங்காவலர் குழு தலைவர் தர்மர், ஹிந்து அறநிலையத்துறை உதவியாளர் பெருமாள்சாமி பங்கேற்றனர்.
மேலும்
-
அவிநாசி தேர்த்திருவிழா.
-
மாதா நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதல் இடம்
-
ஜெல்லி மிட்டாய், ஜிலேபியில் செயற்கை ரசாயனங்களா?
-
நடைமேம்பாலத்தில் சமூக விரோதிகள் 'அட்டகாசம்' மின் கம்பங்களால் 'ஷாக்' அடிக்கும் அபாயம்
-
காங்., வினய் குல்கர்னிக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
மத்திய, மாநில அரசுகளின் வனத்துறைக்கு வழிகாட்டுதல்களை அறிவித்தது ஐகோர்ட்