'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சூசகம்

புதுடில்லி: ''ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை'' என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பின் நிருபர்கள் சந்திப்பில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
கூட்டத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். அவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார். மேலும் அனைத்து தலைவர்களும் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். அனைத்து கட்சி தலைவர்களும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்திய இந்திய ராணுவத்தினரை பாராட்டினர்.
இந்திய ராணுவத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். நாங்கள் மத்திய அரசிற்கும், ராணுவத்தினருக்கு முழு ஆதரவு அளிப்போம் என்றனர். அதிகாரத்திற்காக மட்டும் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.



மேலும்
-
கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ஏழை பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ்
-
இந்தியா தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் தான்: வெளியுறவு செயலர் உறுதி
-
“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை எதிரொலி: படும் பாதாளத்தில் பாகிஸ்தான் பங்குச்சந்தை!
-
ராணுவ வீரர்களால் பெருமை: ராஜ்நாத் சிங்
-
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்; லாகூரில் வான் பாதுகாப்பு கவச வாகனம் அழிப்பு!
-
அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் அறிவுரை