கேலோ இந்தியா பீச் வாலிபால் போட்டி புதுச்சேரி அணிக்கு வீரர்கள் தேர்வு

புதுச்சேரி:டாமன் டையூவில் நடைபெறும் கேலோ இந்தியா பீச் வாலிபால் போட்டிக்கு புதுச்சேரி அணிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது.

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டு திருவிழா வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதிவரை டாமன் டையூவில் நடைபெறுகிறது. இதில் பீச் வாலிபால் போட்டியில் புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்பதற்கன வீரர்கள் தேர்வு முகாம்லாஸ்பேட்டை, பல்நோக்கு விளையாட்டரங்கில்நேற்று துவங்கியது.

நேற்று நடந்த ஆண்கள் பிரிவிற்கான தேர்வில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களில் இரு அணிக்கான 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பெண்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு முகாம் இன்று நடக்கிறது.

Advertisement