சிலை திருட்டு வழக்குகளில் 137 பேர் கைது
சென்னை:சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், கடந்த ஆண்டு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்த, 137 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் சிலை திருட்டு தொடர்பான வழக்கு களை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம், சென்னை எழும்பூர் முதன்மை பெருநகர நீதிமன்றம், மதுரை கூடுதல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் போன்றவை விசாரிக்கின்றன.
கடந்த ஆண்டு சிலை திருட்டு வழக்கில் சிக்கிய, 137 பேருக்கு, மூன்று நீதிமன்றங்களில், வெவ்வேறு காலகட்டத்தில், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.
அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜாமினில் வெளிவர முடியாத படி, ஆணைகள் பெறப்பட்டு உள்ளன. மேலும், 14 வழக்குகளில், 42 பேருக்கு தண்டனை பெற்று தரப்பட்டு உள்ளது என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காமாட்சி அம்மன் கோவிலில் திருகல்யாண உற்சவம் துவக்கம்
-
திருவிழாவுக்கு சிறப்பு பஸ் இல்லை கொழுமம் மக்கள் வேதனை
-
சந்தனமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்
-
மானிய விலையில் சோளம் விதை
-
பள்ளி திறக்கும் நாளில் பாடபுத்தகம் முழுமையாக வழங்க எதிர்பார்ப்பு
-
இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் குடிமங்கலத்தில் 51 நீர்நிலைகளில் அனுமதி
Advertisement
Advertisement