காமாட்சி அம்மன் கோவிலில் திருகல்யாண உற்சவம் துவக்கம்
உடுமலை: உடுமலை காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண திருவிழா நாளை துவங்குகிறது.
உடுமலை நேரு வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவிழா நேற்று நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. அன்று மாலை, பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து நாளை, (10ம் தேதி) முதல் 13ம் தேதி வரை மூன்று நாட்கள் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடக்கிறது. நாளை அதிகாலையில் கணபதி ேஹாமம் மற்றும் கோ பூஜை நடக்கிறது. காலை, 10:30 மணி அளவில் கொடியேற்றப்படுகிறது.
பின் பக்தர்கள் முளைப்பாரி எடுக்கின்றனர். மாலையில், கும்பஸ்தாபிதம் செய்யப்படுகிறது. வரும் 11ம் தேதி காலை, 10:00 மணிக்கு பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறவும், புதிதாக வேண்டுதல் வைத்தும், சுவாமிக்கு நேர்த்திகடன் செலுத்தும் வகையிலும், மாவிளக்கு எடுத்தும் பொங்கல் வைத்தும் வழிபடுகின்றனர்.
மே 12ம்தேதி காலை, 6:30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நடக்கிறது. தொடர்ந்து 10:30 மணிக்கு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.மாலையில் வான வேடிக்கையுடன் திருமண கோலத்தில் சுவாமிகளின் திருவீதி உலா நடக்கிறது.
மேலும்
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை