சந்தனமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

வால்பாறை: வால்பாறையில், சந்தனமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை ராஜிவ்காந்தி நகர் சந்தனமாரியம்மன் கோவிலின், 17ம் ஆண்டு திருவிழா நேற்று காலை, 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:30 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
விழாவில், நாள் தோறும் காலை, மாலை, அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள், தீபாராதனை நடக்கிறது.
நாளை, 10ம்தேதி இரவு, 7:30 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். 11ம் தேதி மாலை, 3:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்ததை பக்தர்கள் முக்கிய வீதி வழியாக கோவிலுக்கு கொண்டு சென்றனர்.
வரும், 12ம் தேதி காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், மதியம், 12:00 மணிக்கு அன்னதான விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மேலும்
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: தலையிட உலக வங்கி மறுப்பு