கோவில் திருவிழாவிற்கு மேடை அமைப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஓட்டந்தாங்கல் ஊராட்சியில் பூந்தண்டலம் துணை கிராமம் உள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தை, ஆடி, சித்திரை ஆகிய மாதங்களில் கோவில் திருவிழாக்கள் விமரிசையாக நடப்பது வழக்கம்.
அப்போது, இரவு நேரத்தில் நாடகம் நடத்த போதிய மேடை வசதி இல்லாமல் இருந்தது. நாடக மேடை அமைக்க கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 ---- 25 நிதி ஆண்டில், 15வது மத்திய மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ், 10 லட்சம் செலவில், நாடக மேடை கட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நாடக மேடை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காமாட்சி அம்மன் கோவிலில் திருகல்யாண உற்சவம் துவக்கம்
-
திருவிழாவுக்கு சிறப்பு பஸ் இல்லை கொழுமம் மக்கள் வேதனை
-
சந்தனமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்
-
மானிய விலையில் சோளம் விதை
-
பள்ளி திறக்கும் நாளில் பாடபுத்தகம் முழுமையாக வழங்க எதிர்பார்ப்பு
-
இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் குடிமங்கலத்தில் 51 நீர்நிலைகளில் அனுமதி
Advertisement
Advertisement