ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

சிவகங்கை:பூவந்தி அருகே, மினி சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பூவந்தி அருகே மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.

அதில், 38 மூட்டைகளில் 40 கிலோ வீதம் மொத்தம் 1,520 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. வாகனத்துடன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த டிரைவர் முத்துமுருகனை 38, கைது செய்தனர். அப்பகுதி மக்களிடம், ரேஷன் அரிசியை வாங்கி, பூவந்தியில் உள்ள கோழிப்பண்னைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இதில் தொடர்புடைய, சரக்கு வாகன உரிமையாளர் வெற்றிவேலை போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisement