இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாயமான இளம்பெண்ணை போலீசா் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி காந்தி சாலையை சேர்ந்தவர் சண்முகம் மகள் மோனலிசா,24; டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த, 6ம் தேதி கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அச்சமடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement