கம்பம், சின்னமனுார் மெயின் பஜார்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வலியுறுத்தல்
கம்பம்: கம்பம், சின்னமனுார் மெயின் பஜாரில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த இரு நகரங்களில் மெயின் பஜார் குறைந்தது ஒரு கி.மீ. தூரத்திற்கு உள்ளது. நூற்றுக்கணக்கான கடைகளும், ஒட்டல்களும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. தினமும் கோயில், அரசியல் கட்சிகள், இறப்பு ஊர்வலம் என ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கான ஊர்வலம் பஜார் பகுதியில் நடைபெறுகிறது.
பட்டாசுகளை அதிகம் வெடிப்பதும், இறுதி ஊர்வலத்தில் பூக்களை வீசுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் கடைகளில் வியாபாரம் பாதிக்கும் நிலை உள்ளது. பல சமயங்களில் பட்டாசுகள் தெறித்து கடைகளுக்குள் விழுந்து தீப்பற்றுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் நடமாட முடியாத நிலை எழுந்து வருகிறது.
கம்பம், சின்னமனூர் நகர மெயின் ரோட்டில் பட்டாசு வெடிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தகர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ரயிலில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்; திரிபுராவில் பரபரப்பு
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான்; இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு
-
டில்லி இந்தியா கேட் பகுதிகளில் மக்களுக்கு தடை; சண்டிகரில் எச்சரிக்கை ஒலி
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு