நாய்கள் கடித்து 6 ஆடு பலி
காங்கயம்: காங்கயம், வீரணம்பாளையம், சூலக்கல் புதுாரை சேர்ந்த சிதம்பரம், 50; விவசாயி. தோட்டத்தில், 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம் மேய்ச்சலுக்கு பின், ஆடுகளை பாட்டியில் அடைத்து விட்டு, வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் சென்று பார்க்கும் போது, பட்டியில் இருந்த, எட்டு செம்மறி ஆடுகளை நாய்கள் கடித்தது தெரிந்தது. ஆறு ஆடுகள் இறந்தும், இரண்டு ஆடுகள் காயமடைந்தும் இருந்தன. காங்கயம் பகுதியில், தினந்தோறும் தெருநாய்கள் கால் நடைகளை வேட்டையாடி வருவது தொடர் கதையாக உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதாரங்களை கொடுத்தாலும் பயங்கரவாத தொடர்பை மறுக்கும் பாக்.,: இந்திய தூதர்
-
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
-
பொய்த்தகவல் பரப்பி உலகத்தை ஏமாற்றும் பாகிஸ்தான்!
-
எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு; குஜராத்தில் பட்டாசு, டிரோன்களுக்கு தடை!
-
பயணிகள் விமானங்களை கேடயமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு
Advertisement
Advertisement